யோகானந்தர் — ப்ரிபேர் யுவர்செல்ஃப் நௌ டு செலிப்ரேட் கிறிஸ்துமஸ்…

16 டிசம்பர், 2022

த செகண்ட் கமிங் ஆஃப் க்ரைஸ்ட்: த ரிஸரெக்‌ஷன் ஆஃப் த க்ரைஸ்ட் விதின் யூ– இயேசுவின் உண்மையான போதனைகள் பற்றிய பரமஹம்ஸரின் வெளிப்பாட்டு விளக்கம் நூலில் வெளியிடப்பட்ட பரமஹம்ஸ யோகானந்தர் எழுதியருளிய கிறிஸ்துமஸ் செய்தியிலிருந்து ஒரு பகுதி பின்வருமாறு.” நம்முடைய உணர்வுநிலையில் கிறிஸ்து உணர்வுநிலை பிறப்பை உணருவதே உண்மையான கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்” என்று அவர் கூறினார். நாம் விடுமுறை பருவத்திற்குள் நுழையும் அதே சமயம், கிறிஸ்துமஸ் பருவகால கொண்டாட்டம், அது மெய்யாகவே இருக்க வேண்டிய விதமான, நம்முள் பிறக்கும் உண்மையான அமைதி மற்றும் ஆனந்தத்தின் கொண்டாட்டமாக மாற்றுவதற்கு ‘எப்படி-வாழ-வேண்டும் ஞானத்தை பயன்படுத்தத் தொடங்க பரமஹம்ஸர் ஒரு வாய்ப்பை வழங்குகிறார்.

எல்லா இனங்களிலும் உறையும் மற்றும் அவர்களை சமமாக நேசிக்கும் அந்த கிறிஸ்து-அன்பின் பீடமாக உங்களிதயத்தை ஆக்குங்கள். இதனால், அவர்களின் சரீர-ஆலயங்களில் எங்கும் நிறைந்துள்ள கிறிஸ்துவின் இருப்பிடத்தை காணுற்று நீங்கள் அனைத்து மனிதர்களையும் நேசிக்க முடியும்.

இயேசு தம் எதிரிகளை மன்னித்தது போல, உண்மையான மற்றும் கற்பனையான உங்கள் எதிரிகள் அனைவரையும் மன்னியுங்கள். நீங்கள் கொடுக்கும் நன்மைக்கு ஈடாக இரக்கமற்ற செயல்கள், வார்த்தைகள் அல்லது நன்றியின்மையால் உங்களை வேதனைப் படுத்துபவர்களுக்காக உங்கள் இதயத்தை கருணையுடன் கூடிய புரிதலால் நிரப்புங்கள். உங்கள் பிரார்த்தனை இப்படி இருக்கட்டும்: “தந்தையே, தாங்கள் செய்வது அறியாமல் தவறிழைத்த என் சகோதரர்களை நேசிக்க எனக்குக் கற்றுக்கொடுங்கள். இரக்கமற்ற தன்மையால் அவர்களை தீமைக்குள் ஆழமாகத் தள்ளாதிருப்பேனாக, மாறாக என் அன்பு அவர்களை சிறந்த வாழ்க்கை முறைகளுக்கு தூண்டட்டும்.”

உங்கள் வாழ்க்கையின் அனைத்து செயல்களையும் இயேசு கிறிஸ்துவின் நேர்மையுடனும் அச்சமின்மையுடனும் முறைப்படுத்துங்கள்.

மாயையின் சோதனைகளை இயேசு கடந்து வந்த அதே வேளையில், துக்கத்தை உருவாக்கும் சோதனைகளை சுய கட்டுப்பாட்டின் மூலம் வெல்லுங்கள் [சொல்லகராதியில் மாயையைப் பார்க்கவும்]. எல்லா நல்ல விஷயங்களுக்கும் ஒரு விருப்பத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். புலன்களின் தவறான பயன்பாட்டால் கிடைக்கும் தற்காலிக இன்பங்களை விட்டுவிட்டு, ஆன்மாவின் நீடித்த, உண்மையான மகிழ்ச்சியை நாடுங்கள்.

மற்றவர்களின் தீமைக்கு நன்மையையும், தவறான புரிதலுக்கு, புரிதலையும் கொடுங்கள், இரக்கமற்ற தன்மைக்கு கருணை காட்டுங்கள். உங்களுக்குள், தடுமாற்றத்திற்கு அமைதியையும், சஞ்சலத் தன்மைக்கு சாந்தமும் பொருள்சார் இன்பத்திற்கு நிலையான பேரின்பத்தையும் மாற்றீடு செய்யுங்கள்.

உங்கள் சிறந்த நற்குணங்களாகிய ஆன்மீக அன்பளிப்புகளை தேவைப்படுபவர்களுக்கு கொடுங்கள், மேலும் உங்கள் சொந்த நலனுக்காக உங்களை நேசிக்கும் பெரியவர்களிடமிருந்து அற்புதமான ஆன்ம குணங்களைப் பெறுங்கள்.

கிறிஸ்து ஒவ்வொரு கிறிஸ்துமஸிலும், அல்லது வேறு எந்த நேரத்திலும், தியானத்தினால் விழிப்படைந்த உணர்வுநிலையில் மீண்டும் பிறக்க முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எங்கும் நிறைந்த, என்றென்றும் இருக்கும் கிறிஸ்து உங்கள் பக்தியுடன் கூடிய கவன குவிப்பில் புதிதாகப் பிறந்ததை உணருங்கள். உங்கள் தினசரி ஆழ்ந்த தியானத்தின் எப்போதும் புதிய, எப்போதும் அதிகரிக்கும் ஆனந்தமாக அவருடன் தொடர்புகொள்வதன் மூலம் அறியப்படாத கிறிஸ்துவை உங்களுக்கு தெரியப்படுத்துங்கள். தியானத்தின் இந்த ஆனந்தமாக கிறிஸ்துவை நேசியுங்கள், இந்த வழியில் ஒவ்வொரு நாளும் ஆன்மீக கிறிஸ்துமஸைக் கொண்டாடுங்கள்: அவருடைய இரண்டாவது வருகை, உங்களுக்குள்.

கிறிஸ்து அவதரிப்பை, அனைத்து இயற்கையின் மகத்துவத்திலும், உங்கள் விழித்தெழுந்த ஞானத்திலும், உண்மையான அழகுடனிருக்கும் எல்லாவற்றிலும், கிறிஸ்து குணங்களின் நறுமணத்தால் நிரப்பப்பட்ட அனைவரிடமும் காணுங்கள்.

கிறிஸ்மஸில் நீங்கள் எதைச் செய்தாலும், கிறிஸ்துவின் அமைதியில் கிறிஸ்துவைப் பற்றிய சிந்தனையுடன் உணர்ந்தனுபவியுங்கள்.

அன்பளிப்புகளை அனைவரிலுமுள்ள கிறிஸ்துவுக்கு சமர்பித்தல்களாக பரிமாறிக் கொள்ளுங்கள்; உங்கள் அமைதியான உணர்வுநிலை எனும் தெய்வீக ஆன்ம குணங்களால் வளமையாக அலங்கரிக்கப்பட்டு, பிரகாசிக்கும் கிறிஸ்துமஸ் மரத்தில், உங்கள் இதயத்தை பரிசாக அவருக்கு வையுங்கள். அங்கே கிறிஸ்துவிடமிருந்து அவரையே பரிசாகப் பெறுங்கள்.

தியானத்தின் நுழைவாயிலின் மூலம், உங்கள் சிறைப்படுத்தப்பட்ட ஆனந்தம் எல்லாவற்றிலும் உள்ள கிறிஸ்துவின் இதயத்திற்கு நழுவி அங்கு இருப்பு கொள்ளட்டும். பரந்து விரிந்த நீல வானுலகிற்கப்பால் தொலைதூர கோள்களிலும், நீங்கள் சந்தித்த மற்றும் நேசித்த உங்களுக்கு நெருக்கமான ஆன்ம சிற்றலைகளிலும் உங்கள் ஆனந்தம் நடனமாடட்டும். அப்பொழுது படைப்பின் ஒவ்வொரு வெளிப்பாட்டிலும் கிறிஸ்துவை நீங்கள் காண்பீர்கள். அனைத்து மகான்களிடத்தும், எல்லா மனிதர்களிலும், அனைத்து உயிரினங்களிலும், நட்சத்திரங்கள் நிறைந்த அண்டத்திலும், உங்கள் எண்ணங்களின் தொட்டில் மற்றும் உங்கள் ஆன்மாவின் ஆலயத்திலும் கிறிஸ்துவின் எங்கும் நிறைந்த ஆனந்தத்தை நீங்கள் காண்பீர்கள்.

கிறிஸ்துமஸ் சமயத்தில், நேரில் YSS ஆசிரமம் அல்லது மையத்தில், அல்லது ஆன்லைனில் நீங்கள் எங்களுடன் இணைய முடியும் என்று நம்புகிறோம். கீழே நீங்கள் இரண்டு இணைப்புகளைக் காண்பீர்கள், ஒன்று உங்களுக்கு அருகிலுள்ள YSS இருப்பிடத்தைக் கண்டறிய உங்களை அழைத்துச் செல்லும், மற்றொன்று உங்களை கூடுதல் உத்வேகம் மற்றும் வழிகாட்டுதலுடனுமான ஒரு வழிமுறை தகவல் பக்கத்திற்கு அழைத்துச் செல்லும், இது இப்பருவத்தின் உண்மையான உணர்வில் இப்போது ஆழமாக மூழ்குவதற்கு உதவுகிறது !

இதைப் பகிர