புது வருட வாயில்களில் நுழைவீர்களாக

அருளியவர் ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர்

புத்தாண்டில் அனைத்து நம்பிக்கைகளின் நுழைவாயில்கள் திறக்கப்படுவதை மணிகள் பெரு முழக்கம் செய்து அறிவித்தன. மனச்சோர்வு, நோய் மற்றும் தோல்வியால் பாதிக்கப்பட்ட கடந்த பழைய ஆண்டை மறதிக் கல்லறையில் மகிழ்ச்சியுடன் அடக்கம் செய்ய காலத்தின் எப்போதும் இயங்கும் பேழை சுமப்போர் சுமந்து சென்றுள்ளனர். உங்கள் ஆன்ம சக்திகளின் களங்களில் அமைதியாகப் பின்தொடர்ந்து, உங்கள் உறுதியையும், உற்சாகத்தையும், விடாமுயற்சியையும் பயமுறுத்த கடந்த வருடத்தின் சோதனையை மீண்டும் கற்பனை செய்து அழைக்காதீர்கள்.

இதோ, புத்தாண்டின் வாயில்கள் வழியாக, எதிர்கால சாதனைகளின் தொலைதூர வண்ணமய அலங்காரங்கள் உங்களை நோக்கி மிளிர்கின்றன, மேலும் அவற்றை நாடுவதற்கு உங்களை வெளிப்படையாகவே கவர்ந்திழுக்கின்றன. சாதிக்க வேண்டும் என்ற நம்பிக்கையுடன் அவற்றைப் பார்ப்பது கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது. மன மற்றும் உடல் சோம்பேறித்தனம், படைப்புத் திறன் இல்லாமை, சந்தேகம், பயம், விரக்தி மற்றும் தீய பழக்கங்கள் ஆகிய கொள்ளையர்களுக்கு எதிராக தெய்வீக உறுதி எனும் ஆயுதம் ஏந்தியபடி, வழியில் அதி வேக அற்புதங்களைச் ஆற்றியபடி நீங்கள் மிக வேகமாக அமைதியுடன் ஓடத் தொடங்க வேண்டும்.

பாதை வாய்ப்புகளால் ஒளிரலாம் அல்லது சோதனைகளால் மந்தமாக இருக்கலாம்; ஆனால் உங்களால் முடிந்தவரை முயற்சி செய்ய நினைவில் கொள்ளுங்கள், பின்னர் நீங்கள் உங்களால் முடிந்ததைச் செய்துள்ளீர்கள், மேலும் எதுவும் செய்ய முடியாது என்று நீங்கள் நினைக்கும் நிலையில் மீண்டும் மீண்டும் முயற்சிக்கவும். அத்தகைய முயற்சியை மேற்கொண்ட பிறகு, புதிர்களின் இருளில் இருந்து, தெய்வீக வழிகாட்டலின் அனைத்து ஒளிரும் ஒளி உங்கள் பாதையை ஒளிர்விக்கும்.

அவனுடைய ஒளியின் முன் இருள் அனைத்தும் பறந்து விடும், அவனுடைய இறையடியார்கள் உங்கள் உறுதியெனும் சிறு குழந்தையின் கரத்தைப் பற்றிக் கொண்டு, உங்கள் ஆற்றலை சோதிக்கும் சோதனைகள் ஊடாக சாஸ்வத திருப்தியளிக்கும் நிறைவேற்றத்தின் இலக்கை நோக்கி உங்கள் உணர்வுபூர்வ முயற்சிகளின் அடிச்சுவடுகளை இடைவிடாமல், அச்சமின்றி வழிநடத்துவார்கள். உணர்வுபூர்வமாக தொடங்கப்பட்ட, உலகாயத மற்றும் ஆன்மீக வெற்றிக்கான உங்கள் தொடர்ச்சியான முயற்சிகளின் தெய்வீக வழிகாட்டுதலின் மீதான நம்பிக்கையும் விசுவாசமும் புத்தாண்டின் நுழைவாயில்கள் மூலம் ஏற்கனவே மங்கலாகத் தெரியும் உங்கள் இலக்கை நோக்கி விரைவாக உங்களை வழிநடத்தும்.

வாருங்கள், சோம்பேறி சகோதரர்களே, தட்டிக் கழிப்போரே மற்றும் ஆர்வலர்களே, விழித்தெழும் நீடித்த ஆர்வத்துடனும், தொடர் முயற்சியுடனும், புத்தாண்டை வரவேற்கும் நுழைவாயில்கள் மூலம் தெளிவாக காணக்கூடிய சாதனையின் பொன்னான பாதையைப் பின்பற்றுவீர்களாக.

பல பிறவி பயணங்களுக்குப் பிறகு வீடு திரும்ப நீங்கள் எதிர்பார்க்கையில், இறைவன் பொறுமையிழந்து, கொழுந்துவிடும் ஆசையுடன், விண்ணுலகம் அளித்த உங்கள் சுதந்திர விருப்பத்தினால், நீங்கள் விரைவில் மகிழ்வுடன் விரும்பும் துடிப்பான அடிகளை முழுமையான உள்நிறைவின் புனித சரணாலயத்தை நோக்கி முன்னேறி, அங்கு எல்லையற்றதன் இல்லத்தில் ஓய்வெடுக்க வேண்டும் என்று நம்புகிறார்.

இதைப் பகிர