இதை நினைவில் கொள்ளுங்கள்: நான் சென்றுவிட்ட பிறகு, அன்பு மட்டுமே என் இடத்தை நிரப்பும். இரவும் பகலும் இறைவனின் அன்பில் திளைத்திருங்கள், அந்த அன்பை அனைவருக்கும் கொடுங்கள்.
— ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர்
தினத்தை முன்னிட்டு, மார்ச் 7 செவ்வாய்க்கிழமை காலை 6:30 மணி முதல் 8:00 மணி வரை YSS, சன்னியாசி ஒருவர் ஆங்கிலத்தில் வழிநடத்திய சிறப்பு தியானம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கீதம் இசைத்தல், தியானம், அதனைத் தொடர்ந்து ஆன்மீக சொற்பொழிவு ஆகியவை நடைபெற்றன.
பரமஹம்ஸ யோகானந்தரை நாம் போற்றி வணங்கும் இந்த சிறப்பு நாளில், குரு-காணிக்கை சமர்ப்பிப்பதன் மூலம் தங்கள் வாழ்க்கையில் பல அருட்கொடைகள் பொழிந்த மகத்தான குருவுக்கு பக்தர்கள் தங்கள் நன்றியைத் தெரிவிக்கிறார்கள். நீங்கள் விரும்பினால், ஆன்லைனில் இந்த காணிக்கையை செலுத்தலாம் அவரது ஆன்ம அனுபூதி போதனைகளைப் பரப்புவதற்கு உங்கள் மதிப்புமிக்க நன்கொடை பயன்படுத்தப்படும்.