இப்பொழுது நீ ஆன்மீக முயற்சியில் ஈடுபட்டால் எதிர்காலத்தில் எல்லா விதத்திலும் முன்னேற்றம் அடைவாய்.
— ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஸ்வர்
குருதேவர் பரமஹம்ஸ யோகானந்தர் மற்றும் சுவாமி ஸ்ரீ யுக்தேஸ்வர் ஆகியோரின் மகாசமாதி திவஸ்களை நினைவுகூரும் வகையில், மார்ச் 6, ஞாயிற்றுக்கிழமை காலை 6:10 மணி முதல், பிற்பகல் 12:30 மணி வரை ஆறு மணி நேர தியானம் நடைபெற்றது.(ஐ.எஸ்.டி.). இது ஆங்கிலம் மற்றும் இந்தியில் ஒய்.எஸ்.எஸ் சன்னியாசிகளால் வழிநடத்தப்பட்டது.
இந்த நிகழ்வு இரண்டு அமர்வுகளில் நடத்தப்பட்டது:
- அமர்வு 1: காலை 6:10. முதல் 9:30 வரை (IST)
- இடைவேளை: காலை 9:30 முதல் 10:00 வரை (IST)
- அமர்வு 2: காலை 10:00 முதல் மதியம் 12:30 வரை
தியானம், சக்தியூட்டும் உடற் பயிற்சிகளுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து ஒரு உத்வேகமூட்டும் வாசிப்பு, கீத நேரங்கள் மற்றும் தியானம். அது யோகானந்தரின் குணமளிக்கும் உத்தி மற்றும் ஒரு இறுதிப் பிரார்த்தனையுடன் நிறைவடைந்தது.