1996ல் ஒரு யோகியின் சுயசரிதம் வெளியாகி 50 ஆண்டுகள் நிறைவான நிகழ்வின் போது, அப்போதும் நம்முடன் இருந்த பரமஹம்ஸரின் நெருங்கிய சீடர்கள் புத்தகப் பிரதிகள் வந்து சேர்ந்த நாளின் தமது நினைவலைகளையும் அது தம் வாழ்வில் ஏற்படுத்தித தாக்கத்தையும் பகிர்ந்து கொண்டனர். அந்தப் பக்கங்களிலிருந்து தோன்றிய தெய்வீக ஞானம், அன்பு, வாழ்க்கையின் நிலைமாற்றும் தொலைநோக்குப் பார்வை ஆகியவற்றை முதலில் அனுபவித்தவர்களில் ஒரு சிலராக அவர்கள் இருந்தனர்; அந்தப் பக்கங்கள் அப்போதிருந்து இலட்சக்கணக்கான வாழ்க்கைகளை மாற்றியிருக்கிறது.
யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா/ ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப்-ன் மூன்றாவது தலைவி (1955-2010)
குருதேவர் எங்களிடம் கூறினார்: “நான் இவ்வுலகை விட்டுச் சென்ற பின், இப்புத்தகம் இலட்சக்கணக்கானவர்களின் வாழ்க்கைகளை மாற்றும். நான் சென்றுவிட்ட பின் அது என் தூதுவராக இருக்கும்.”
ஒரு யோகியின் சுயசரிதத்தின் உருவாக்கம் பரமஹம்ஸ யோகானந்தர் பல வருட காலமாக அதன் மீது உழைத்த ஒரு திட்டப்பணி ஆகும். நான் 1931-ல் மௌண்ட் வாஷிங்டனுக்கு வந்த போது, பரமஹம்ஸர் சுயசரிதத்திற்கான பணியை ஏற்கனவே துவங்கி விட்டிருந்தார். ஒரு முறை நான் அவருடைய வாசிப்பு அறையில் செயலாளருக்குரிய சில கடமைகளில் கவனம் செலுத்திக் கொண்டிருந்த பொழுது, அவர் எழுதிய முதல் அத்தியாயங்களில் ஒன்றை பார்க்கும் பேறு பெற்றேன் — அது ‘புலிச்சாமியார்’ பற்றியது. அதைப் பாதுகாக்கும்படி அவர் என்னிடம் கூறினார், மேலும் அவர் எழுதிக் கொண்டிருக்கும் புத்தகத்தில் அது சேர்க்கப்படப் போகிறது என்று விளக்கினார்.
இருப்பினும், 1937க்கும் 1945க்கும் இடையில் புத்தகத்தின் பெரும் பகுதி எழுதப்பட்டுவிட்டது. பரமஹம்ஸருக்கு பல பொறுப்புகளும் கடமைகளும் இருந்ததால் அவரால் தினசரி இப்புத்தகத்தின் மீது பணி செய்ய முடியவில்லை; ஆனால் பொதுவாக, அவர் மாலை வேளைகளை, அத்துடன் அவரால் அதன்மீது கவனம் வைக்க முடிந்த ஓய்வு நேரங்களையும், அதற்காக அர்ப்பணித்தார்.
எங்களுடைய ஒரு சிறு குழு — ஆனந்த மாதா (கீழே), ஷ்ரத்தா மாதா, மற்றும் நான் — பெரும்பான்மையான அந்த நேரங்களில் கையெழுத்துப் பிரதிகளை தட்டச்சு செய்தவாறு, அவரின் அருகில் இருந்தோம். ஒவ்வொரு பகுதியும் தட்டச்சு செய்யப்பட்ட பிறகு, தன் பதிப்பாசிரியராகப் பணியாற்றிய தாரா மாதாவிடம் குருதேவர் கொடுப்பார்.
ஒருநாள் தன் சுயசரிதத்தின் மீது பணி செய்துகொண்டிருந்த போது, குருதேவர் எங்களிடம் கூறினார்: “நான் இவ்வுலகை விட்டுச் சென்ற பின், இப்புத்தகம் இலட்சக்கணக்கான வாழ்க்கைகளை மாற்றும். நான் சென்றுவிட்ட பின் அது என் தூதுவராக இருக்கும்.”
மூல வரைவுப்படி நிறைவுற்ற போது, தாரா மாதா அதற்கான ஒரு வெளியீட்டாளரைத் தேடி நியூ யார்க் நகருக்குச் சென்றார். பரமஹம்ஸர் அவருடைய அறிவிற்காகவும் பதிப்பாசிரியத் திறமைக்காகவும் அவர்மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார் மற்றும் அடிக்கடி அவரை வெளிப்படையாகப் புகழ்ந்தார். அவர் கூறினார்: “இப்புதகத்திற்காக [அவர்] செய்திருப்பதை என்னால் எடுத்துரைக்கத் தொடங்கக்கூட முடியாது. நியூ யார்க் நகருக்குச் செல்லுமுன் அவர் மோசமாக நோய்வாய்ப்பட்டிருந்தார். இருந்தாலும் அப்படியே நியூ யார்க் நகருக்குக் கிளம்பினார். அவரின்றி, இப்புத்தகம் ஒருபோதும் வெளிவந்திருக்காது.”
புத்தகத்தின் நிறைவிற்கு குருதேவர் ஆற்றிய எதிர்வினை எந்த வார்த்தைகளாலும் விவரிக்க முடியாத ஆனந்தமாக இருந்தது. என்னுடைய பிரதியில், ஆசிரமங்களில் அப்போதிருந்த மற்ற பக்தர்களில் பலருக்கும் செய்ததைப் போலவே, கையெழுத்துப் பதிவிட்டார். கையெழுத்துப் பிரதியைத் தட்டச்சு செய்ய உதவியிருந்ததால், அதை நான் பெற்ற போது இது ஓர் அமரத்துவ நூல் — இதற்கு முன் ஒருபோதும் அத்தகைய ஒரு தெளிவான மற்றும் உத்வேகமூட்டும் வழியில் வழங்கியிராத மறைபொருள் உண்மைகளை முதன்முறையாக வெளிப்படுத்திய ஒன்று — என்று நான் அறிந்தேன். அற்புதங்கள், மறுபிறவி, கர்மவினை, மரணத்திற்குப் பின் வாழ்வு ஆகியவற்றின் மற்றும் அதன் பக்கங்களில் உள்ளடக்கப்பட்ட மற்ற அற்புதமான ஆன்மீக உண்மைகளின் குருதேவருடைய விளக்கத்தை வேறு எந்த ஆசிரியரும் அணுகியிருக்கவில்லை.
புத்தகத்தின் இன்றைய கீர்த்திக்கு அவருடைய எதிர்வினை என்னவாக இருந்திருக்கும்? யோகியின் சுயசரிதம் ஒவ்வொரு கலாச்சாரம், இனம், மதம், மற்றும் வயது கொண்ட மக்களுக்கும் பூமியின் எல்லா மூலை முடுக்குகளுக்கும் சென்றடைந்திருப்பதை மற்றும் அது இந்த ஐம்பது வருடங்களாக மிகப்பெரிய புகழுடனும் உற்சாகத்துடனும் வரவேற்கப்பட்டிருப்பதை எண்ணி அவர் பணிவுடன் நெகிழ்ந்திருப்பார். குருதேவர் தனது சொந்த முக்கியத்துவத்தின் மீது ஒருபோதும் கவனம் செலுத்தியிராத போதிலும், அவர் நிச்சயமாக தான் எழுதியதின் பெரும் மதிப்பின்மீது நம்பிக்கை வைத்திருந்தார் — ஏனெனில் தான் பேருண்மையை எழுதிக் கொண்டிருந்ததை அவர் அறிந்திருந்தார்.
தாரா மாதா (லாரி பிராட்) வுக்காக எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட புத்தகம். ஒரு யோகியின் சுயசரித்தின் ஆசிரியரின் நன்றியுரையில் குறிப்பிடும் அஞ்சலியில், பரமஹம்ஸர் தனது கையெழுத்துப் பிரதியைத் தொகுத்தமைத்த தாரா மாதாவின் பங்கிற்கு தனது பாராட்டைத் தெரிவிக்கிறார். இந்தப் புத்தகத்தின் அவருடைய பிரதியில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துக்கள், இந்த மதிப்பு மிக்க சீடரின் சேவையில் அவர் கொண்டிருந்த ஆழமான மதிப்பைப் பற்றிய உள்ளார்ந்த அறிதலை தெரிவிக்கிறது.
நம் லாரி பிராட்டிற்கு,
“இந்த புத்தகத்தின் வெளியீட்டில் உங்கள் துணிவான மற்றும் அன்பான பங்கிற்காக இறைவனும் குருமார்களும் எப்போதும் உங்களுக்கு அருளாசிகள் வழங்கட்டும். ப. யோ.”
“இறுதியில் இறைவன், எனது குருமார்கள், ஆசான்கள் ஆகியோரின் புனித நறுமணம் என் ஆன்மாவின் இரகசியக் கதவுகள் வழியாக வெளிவந்துள்ளது — லாரி பிராட் மற்றும் பிற சீடர்களின் முடிவற்ற இடையூறுகள் மற்றும் இடைவிடாத முயற்சிகளுக்குப் பிறகு அனைத்துத் துன்பக் கட்டுக்களும் நித்திய ஆனந்தச் சுடரில் எரிந்து கொண்டிருக்கின்றன.”
யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா/ ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் -ன் நான்காவது தலைவி (2011-2017)
“ஒரு யோகியின் சுயசரிதம் ஒரு தெய்வீக இலக்கை நோக்கிச் சென்று கொண்டிருந்தது — இறுதியில் குருதேவரின் அருளாசிகளையும் இறையன்பையும் லட்சக்கணக்கான இறைநாடும் ஆன்மங்களுக்கு எடுத்துச் செல்ல.”
என்சினிடாஸ் ஆசிரமத்தில் ஒரு நாள் மாலை, 1946ஆம் ஆண்டின் பிற்பகுதியில், இளைய பக்தர்களான நாங்கள் எங்கள் சமையலறைக் கடமைகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்த பொழுது, குருதேவர் அங்கு வந்தார். அனைத்துச் செயல்பாடுகளும் நிறுத்தப்பட்டன, மற்றும் எங்கள் கவனம் அவரது பரந்த புன்னகை மீதும் வழக்கமான மினுமினுப்பை விட இன்னும் சற்று அழகாக இருந்த அவரது கண்களின் மீதும் குவிந்தது. அவரது கை அவரது முதுகுக்குப் பின்னால் இருந்தது, “எதையோ” மறைத்தது. அவர் இன்னும் சிலரை வரவழைத்து, எங்களை அவருக்கு முன்னால் வரிசையில் இருக்கச் செய்தார். பின்னர் அவர் மறைத்திருந்த புதையலை எங்கள் முன் காட்டினார் — அவரது ஒரு யோகியின் சுயசரிதம் புத்தகத்தின் ஒரு முன்னீடான பிரதி.
“ஓஹோ’ க்களுக்கும்” “ஆஹா’க்களுக்கும்” மத்தியில், நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட, இந்தியாவின் மகத்தான மகான்கள் மற்றும் முனிவர்களிடையேயான அவரது வாழ்க்கை நிகழ்வுகளைப் பார்த்து, எங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்த முடியவில்லை — அவருடன் கழித்த, அவரது விலைமதிப்பற்ற நேரங்களில், இந்த நிகழ்வுகளினால் அடிக்கடி எங்களை ஈர்த்தார். அவர் சில பக்கங்களைத் திறந்தார், கடைசியாக மகாவதார பாபாஜியின் படத்தைக் காட்டினார். கிட்டத்தட்ட மூச்சற்று நாங்கள் எங்கள் மரியாதையைச் செலுத்தி எங்கள் பரம்-பரமகுருவின் சாயலில் இருந்தவரை முதலில் கண்டவர்களில் ஒருவராக நாங்கள் இருக்க கிடைத்த அருளாசிகளில் மூழ்கினோம்.
டிசம்பர் தொடக்கத்தில், வெளியீட்டாளரிடமிருந்து புத்தகக் கட்டுகள் வரும் நிகழ்வில் பங்கேற்கவும், முன்கூட்டியே ஆர்டர் செய்து ஆவலுடன் இருந்த நூற்றுக்கணக்கான பக்தர்களுக்கு அனுப்ப தயார் செய்வதற்காகவும் நாங்கள் அனைவரும் மவுண்ட் வாஷிங்டனுக்கு அழைக்கப்பட்டோம். குறித்த காலத்திற்கு சில வாரங்களுக்கு முன்பே, நேரம் கிடைத்த எங்களில், எவரொருவரும் பழைய கைமுறை பெரிய தட்டச்சுப் பொறிகளில் ஒன்றில் முகவரி லேபிள்களை தட்டச்சு செய்வதில் ஈடுபட்டோம். பெரிய மேஜைகள் (ரம்பச் சட்டத்தின் மேல் தட்டையான பலகைகள்) அலுவலகத்தில் அமைக்கப்பட்டன, ஒரு பெரிய ரோலில் இருந்து பழுப்பு அஞ்சல் காகிதம் ஒவ்வொரு தனி புத்தகத்தையும் வரிசை கிரமமாக உறையிடத் தயாராக இருந்தது, அதைச் சரியான அளவுக்கு கையால் வெட்டி, ஈரமான நுரைப் பஞ்சு பயன்படுத்தி ஈரப்பதமான லேபிள்கள் மற்றும் அஞ்சல் தலைகளை ஒட்டினோம். அந்த நாட்களில் தானியங்கிகள் அல்லது அஞ்சல் இயந்திரங்கள் இல்லை! ஆனால் ஸெல்ஃப்-ரியலைசெஷன் ஃபெலோஷிப் வரலாற்றில் இந்த முக்கியமான நிகழ்வில் பங்கேற்பதில் ஓ, என்ன மகிழ்ச்சி. இந்த உன்னதமான தூதரின் மூலம் நமது புனித குருதேவரை உலகம் அறிந்துகொள்ளும்.
மூன்றாவது மாடி முன்கூடத்தில், குருதேவர் ஒரு மேஜையில் இடைவிடாமல் மணிக்கணக்கில் அமர்ந்து, ஒவ்வொரு புத்தகத்திலும் கையெழுத்திட்டார். வெளியீட்டாளர் அனுப்பிய அட்டைப்பெட்டிகளில் இருந்து புத்தகங்கள் அகற்றப்பட்டு, திறக்கப்பட்டு, அவர் ஒவ்வொன்றிலும் கையெழுத்திட்டுக் கொண்டே வரும்போது, ஒரு சீரான ஓட்ட்த்தில் புத்தகங்கள் அவருக்கு முன் வைக்கப்பட்டன – ஒவ்வொரு மையூற்றுப் பேனாவும் காலியாகும் போது, மற்றொன்று மீண்டும் நிரப்பிக் வைக்கப்பட்டது.
அவர் என்னை மாடிக்கு வருமாறு அழைத்தபோது தாமதமாகிவிட்டது. அவர் இன்னும் புத்தகங்களில் கையெழுத்திட்டுக் கொண்டிருந்தார். மூத்த சீடர்கள் அவரைச் சிறிது ஓய்வெடுக்குமாறு வலியுறுத்தினர், ஆனால் வெளியீட்டாளர் அனுப்பிய பெட்டியில் இருந்த ஒவ்வொரு புத்தகமும் அவரது அருளாசிகளுடன் கையொப்பமிடப்படும் வரை அவர் அதைப் பரிசீலிக்கக்கூட மறுத்துவிட்டார். அவர் முகத்தில் மிகுந்த பேரின்ப வெளிப்பாடு இருந்தது, தன்னிலிருந்து, உண்மையான பகுதி ஒன்றும் தன் இறையன்பும் அந்த அச்சிடப்பட்ட பக்கங்களில் உலகம் முழுவதும் வெளியே போகிறது என்பதுபோலவும், அது ஒரு கூடுதல் கணம் நிறுத்தி வைக்கப்படக்கூடாது என்பது போலவும் இருந்தது.
வெளிப்படுத்த முடியாத ஆனந்தத்துடன் நாங்கள் அதிகாலையில் தியானம் செய்ய அவரது காலடியில் அமர்ந்தோம். எங்கள் ஒவ்வொருவருக்கும் இந்தப் பொக்கிஷத்தின் ஒரு தனிப்பிரதியை குருதேவர் எங்களிடம் கொடுத்திருந்தார். மற்ற எல்லா பிரதிகளும் காலையில் அஞ்சலில் அனுப்புவதற்காக சுற்றப்பட்டிருந்தன அல்லது ஹாலிவுட் மற்றும் சான் டியாகோவில் உள்ள அவரது கோயில்களுக்கு அனுப்புவதற்காக கட்டப் பட்டிருந்தது. ஒரு யோகியின் சுயசரிதம் ஒரு தெய்வீக இலக்கை நோக்கிச் சென்று கொண்டிருந்தது — இறுதியில் குருதேவரின் அருளாசிகளையும் இறையன்பையும் லட்சக்கணக்கான இறைநாடும் ஆன்மங்களுக்கு எடுத்துச் செல்ல.
“இரவு முழுவதும் அவர் சொல்வதை எழுதச் சொல்லும் காலகட்டங்கள் இருந்ததை நினைவு கூருகிறேன், மற்றும் அது நாள் முழுவதும் அல்லது அதற்கு மேலும் தொடரும் சந்தர்ப்பங்களும் இருந்தன.”
“நான் விரும்பியதை கண்டுபிடித்துவிட்டேன் என்பதை என் இதயத்தில் அறிந்தேன், பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகளைப் படித்து இறைவனை அறியவேண்டும் என மனதில் தீர்மானித்துக் கொண்டேன்.”
“கட்டுண்ட நிலையில், அவர் முழுப் புத்தகத்தையும் ஒரே அமர்வில் முடித்தார். தான் சந்தித்த எவருக்கும் இல்லாத ஆன்மீக நுண்ணறிவு ஆசிரியருக்கு இருப்பதை உணர்ந்த பிரேமமோய் அவர்கள் பரமஹம்ஸ யோகனந்தருக்கு கடிதம் எழுத முடிவு செய்தார்.”
“நான் இரவில் அதைப் படித்தேன், நான் வேலையில் இருந்தபோது என் தாய் அதைப் படித்தாள். மெய்ப் பொருளின் உலகில் நுழையும் அனுபவத்தில் நாங்கள் மூழ்கியிருந்த விதத்தை விவரிக்க “வாசிப்பு” அநேகமாய் போதுமானதாக இல்லை. வாழ்க்கையின் தோற்றம், சீடராக இருத்தல், கிரியா யோக போதனை — அனைத்தும் ஒரு யோகியின் சுயசரிதத்தில் தெளிவுபடுத்தப்பட்டன.”
1943ல் பரமஹம்ஸ யோகானந்தரை நான் சந்தித்தபோது எனக்கு ஒன்பது வயது. என் தந்தை ஒரு ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் உறுப்பினராக இருந்தார் மற்றும் சான் டியாகோவில் உள்ள கோவிலில் சத்சங்கங்களில் கலந்து கொண்டார். 1947ல் பரமஹம்ஸர் அவருக்குக் கொடுத்த ஒரு யோகியின் சுயசரிதத்தின் பிரதியை நான் படித்தேன். என் தந்தை மிகவும் அடக்கமானவர் மற்றும் தனது சொந்த நம்பிக்கைகளால் மற்றவர்களில் தாக்கத்தை எற்படுத்த முயற்சித்ததில்லை. இதன் விளைவாக, அவர் புத்தகத்தைக் கூட எனக்குக் காட்டவில்லை — நான் தற்செயலாக அதைக் கண்டேன். அதைப் படிக்க எனக்கு சிறிது நேரம் பிடித்தது — நான் மிகவும் சிறு வயதினளாக இருந்தேன், புத்தகத்தில் சில பெரிய வார்த்தைகள் இருந்தன! ஆனால் ஆரம்பத்தில் இருந்தே, ஒரு யோகியின் சுயசரிதம் எனக்கு ஒரு புகலிடமாக, என் ஆன்மாவுக்கு ஒரு குணப்படுத்தும் தைலமாக இருந்து வருகிறது....எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு யோகியின் சுயசரிதம் இறைவனை நாம் அறிந்து கொள்ள முடியும் என்பதைக் காட்டுகிறது.
1939ல் நான் ஆசிரமத்திற்குள் வந்த சிறிது காலத்தில், மவுண்ட் வாஷிங்டனில் உள்ள நிர்வாகக் கட்டிடத்தின் தாழ்வாரத்தில் எங்கள் ஓரிருவருடன் பரமஹம்ஸர் பேசினார். அவர் தனது வாழ்நாளில் சில புத்தகங்கள் எழுத வேண்டியிருக்கும் என்றும்; அந்த புத்தகங்கள் முடிந்ததும், பூமியில் அவரது பணி முடிந்துவிடும் என்றும் இறைவன் கூறினார் என்று குறிப்பிட்டார். ஒரு யோகியின் சுயசரிதம் அந்த புத்தகங்களில் ஒன்றாகும். சுயசரிதம் முதலில் வெளிவந்தபோது, நான் அதை ஓரிரு நாட்களில் ஆரம்பத்திலிருந்து இறுதி வரை படித்தேன் — எவ்வளவு அற்புதமானது மற்றும் உத்வேகமளிப்பது! பரமஹம்ஸரின் போதனைகள் மீது ஆர்வத்தை வளர்ப்பதில் இந்தப் புத்தகம் பெரும் பங்கு வகிக்கும் என்று நான் எண்ணியது எனக்கு நினைவிருக்கிறது. இன்று வரை நாம் பனிப்பாறையின் முனையை மட்டுமே பார்க்கிறோம்.
1946ம் ஆண்டு ஆசிரமத்தில் எனது முதல் கிறிஸ்துமஸ் எனக்கு நினைவிருக்கிறது. ஒரு யோகியின் சுயசரிதம் நிறைவுற்றது. பரமஹம்ஸர் எங்கள் அனைவருக்கும் பிரதிகள் வழங்கினார். அந்தப் பக்கங்கள் நமது குருதேவரின் தெளிவான மற்றும் மகிழ்ச்சிகரமான மனோபாவத்தை எவ்வளவு சக்திவாய்ந்த முறையில் வெளிப்படுத்தின — அவரது முன்னிலையில் நாங்கள் உணர்ந்த அன்பையும் ஆனந்தத்தையும். அதே நிகழ்வுகள் பலவற்றை அவர் தனிப்பட்ட முறையில் விவரிப்பதைக் கேட்டு நாங்கள் எவ்வளவு மேம்படுத்தப்பட்டோம், இந்த புத்தகத்தின் வாயிலாக அனைவராலும் அதில் பகிர்ந்து கொள்ள முடியும்.
ஒரு யோகியின் சுயசரிதம் முதன்முதலில் வெளியிடப்பட்டதை நான் தெளிவாக நினைவு கூருகிறேன். சிறிது காலம் கழித்து பரமஹம்ஸரிடம் என் பிரதியில் சிறு சிந்தனை ஒன்றை எழுதித் தருவீர்களா என்று கேட்டேன். அவர் எழுதினார், "இந்த பக்கங்களின் பீடத்தில் மறைந்திருக்கும் எல்லையற்றதைக் கண்டறியவும்." சில நேரங்களில் எனக்கு ஒரு குறிப்பிட்ட தேவை இருந்த போது, நான் சுயசரிதத்தை ஏதாவது சில பக்கங்களைத் திறந்து நினைப்பேன், "நான் அதை முன்பு பார்த்ததாக கூட எனக்கு நினைவில்லை!" என்று, ஆனால் அது சரியாக நான் இந்த நேரத்தில் கையாள வேண்டியதற்கான வழியை சொல்லும். அதைக் கண்டுபிடிக்க புத்தகத்தில் எங்கு செல்ல வேண்டும் என்று எனக்குத் தெரியாது என்றாலும், நான் அதைப் பார்க்க வேண்டிய நேரத்தில் அந்த பக்கத்திலிருந்து சரியாக வந்து விடுகிறது. குருதேவரின் அறிவுரை உண்மையானது — அந்தப் பக்கங்களின் பீடத்தில் மறைந்திருக்கும் எல்லையற்றதை நீங்கள் கண்டறியலாம்.
1943ல் பரமஹம்ஸ யோகானந்தரை நான் சந்தித்தபோது எனக்கு ஒன்பது வயது. என் தந்தை ஒரு ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் உறுப்பினராக இருந்தார் மற்றும் சான் டியாகோவில் உள்ள கோவிலில் சத்சங்கங்களில் கலந்து கொண்டார். 1947ல் பரமஹம்ஸர் அவருக்குக் கொடுத்த ஒரு யோகியின் சுயசரிதத்தின் பிரதியை நான் படித்தேன். என் தந்தை மிகவும் அடக்கமானவர் மற்றும் தனது சொந்த நம்பிக்கைகளால் மற்றவர்களில் தாக்கத்தை எற்படுத்த முயற்சித்ததில்லை. இதன் விளைவாக, அவர் புத்தகத்தைக் கூட எனக்குக் காட்டவில்லை — நான் தற்செயலாக அதைக் கண்டேன். அதைப் படிக்க எனக்கு சிறிது நேரம் பிடித்தது — நான் மிகவும் சிறு வயதினளாக இருந்தேன், புத்தகத்தில் சில பெரிய வார்த்தைகள் இருந்தன! ஆனால் ஆரம்பத்தில் இருந்தே, ஒரு யோகியின் சுயசரிதம் எனக்கு ஒரு புகலிடமாக, என் ஆன்மாவுக்கு ஒரு குணப்படுத்தும் தைலமாக இருந்து வருகிறது....எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு யோகியின் சுயசரிதம் இறைவனை நாம் அறிந்து கொள்ள முடியும் என்பதைக் காட்டுகிறது.
1939ல் நான் ஆசிரமத்திற்குள் வந்த சிறிது காலத்தில், மவுண்ட் வாஷிங்டனில் உள்ள நிர்வாகக் கட்டிடத்தின் தாழ்வாரத்தில் எங்கள் ஓரிருவருடன் பரமஹம்ஸர் பேசினார். அவர் தனது வாழ்நாளில் சில புத்தகங்கள் எழுத வேண்டியிருக்கும் என்றும்; அந்த புத்தகங்கள் முடிந்ததும், பூமியில் அவரது பணி முடிந்துவிடும் என்றும் இறைவன் கூறினார் என்று குறிப்பிட்டார். ஒரு யோகியின் சுயசரிதம் அந்த புத்தகங்களில் ஒன்றாகும். சுயசரிதம் முதலில் வெளிவந்தபோது, நான் அதை ஓரிரு நாட்களில் ஆரம்பத்திலிருந்து இறுதி வரை படித்தேன் — எவ்வளவு அற்புதமானது மற்றும் உத்வேகமளிப்பது! பரமஹம்ஸரின் போதனைகள் மீது ஆர்வத்தை வளர்ப்பதில் இந்தப் புத்தகம் பெரும் பங்கு வகிக்கும் என்று நான் எண்ணியது எனக்கு நினைவிருக்கிறது. இன்று வரை நாம் பனிப்பாறையின் முனையை மட்டுமே பார்க்கிறோம்.
1946ம் ஆண்டு ஆசிரமத்தில் எனது முதல் கிறிஸ்துமஸ் எனக்கு நினைவிருக்கிறது. ஒரு யோகியின் சுயசரிதம் நிறைவுற்றது. பரமஹம்ஸர் எங்கள் அனைவருக்கும் பிரதிகள் வழங்கினார். அந்தப் பக்கங்கள் நமது குருதேவரின் தெளிவான மற்றும் மகிழ்ச்சிகரமான மனோபாவத்தை எவ்வளவு சக்திவாய்ந்த முறையில் வெளிப்படுத்தின — அவரது முன்னிலையில் நாங்கள் உணர்ந்த அன்பையும் ஆனந்தத்தையும். அதே நிகழ்வுகள் பலவற்றை அவர் தனிப்பட்ட முறையில் விவரிப்பதைக் கேட்டு நாங்கள் எவ்வளவு மேம்படுத்தப்பட்டோம், இந்த புத்தகத்தின் வாயிலாக அனைவராலும் அதில் பகிர்ந்து கொள்ள முடியும்.
ஒரு யோகியின் சுயசரிதம் முதன்முதலில் வெளியிடப்பட்டதை நான் தெளிவாக நினைவு கூருகிறேன். சிறிது காலம் கழித்து பரமஹம்ஸரிடம் என் பிரதியில் சிறு சிந்தனை ஒன்றை எழுதித் தருவீர்களா என்று கேட்டேன். அவர் எழுதினார், "இந்த பக்கங்களின் பீடத்தில் மறைந்திருக்கும் எல்லையற்றதைக் கண்டறியவும்." சில நேரங்களில் எனக்கு ஒரு குறிப்பிட்ட தேவை இருந்த போது, நான் சுயசரிதத்தை ஏதாவது சில பக்கங்களைத் திறந்து நினைப்பேன், "நான் அதை முன்பு பார்த்ததாக கூட எனக்கு நினைவில்லை!" என்று, ஆனால் அது சரியாக நான் இந்த நேரத்தில் கையாள வேண்டியதற்கான வழியை சொல்லும். அதைக் கண்டுபிடிக்க புத்தகத்தில் எங்கு செல்ல வேண்டும் என்று எனக்குத் தெரியாது என்றாலும், நான் அதைப் பார்க்க வேண்டிய நேரத்தில் அந்த பக்கத்திலிருந்து சரியாக வந்து விடுகிறது. குருதேவரின் அறிவுரை உண்மையானது — அந்தப் பக்கங்களின் பீடத்தில் மறைந்திருக்கும் எல்லையற்றதை நீங்கள் கண்டறியலாம்.